search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிபொருட்களின் விலை"

    கடந்த 19 நாட்களாக உயராத பெட்ரோல் விலை இன்று உயர்த்தப்பட்டதை அடுத்து மக்களை ஏமாற்றுவதே மோடியின் பொருளாதார கொள்கை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #rahulgandhi #fuelpricehike #pmmodi
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 19 நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. கடந்த 12-ம் தேதி தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘கர்நாடகா தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை, மக்கள் வாக்களித்து முடித்தவுடன், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. மோடியின் பொருளாதார கொள்கையே முடிந்தவரை மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதாகும்’ என பதிவிட்டுள்ளார். #rahulgandhi #fuelpricehike #pmmodi
    ×